Thursday, July 30, 2009

சிறப்பாக பிளாக்(Blog) அமைய சில யோசனைகள்


Blogs எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இந்த இணையத்தளம் தருகின்றது

http://www.sitesketch101.com/ என்ற முகவரியில் உள்ள தளம் பிளாக்குகள் அமைக்கவும் வெப்சைட்டுகளை உருவாக்கவும் பல வழிகளில் ஆலோசனை கூறும் தளமாக உள்ளது. இந்த தளத்தின் மேலாக உள்ள நேவிகேஷன் பாரில் இத்தளம் தரும் உதவிகளை வகைகளாகப் பட்டியல் இட்டுத் தந்துள்ளது. அவை:

Blogging Tips: இங்கு உங்களுடைய பிளாக்குகளைச் சிறப்பாக்க அவற்றில் தரப்படும் கருத்துக்கள் எதைப் பற்றி எப்படி இருக்க வேண்டும் எனவும் அந்த வலைமனைகளுக்கு நிறைய பேர் வருவதற்கான சூழ்நிலையை எப்படி உருவாக்க வேண்டும் எனவும் டிப்ஸ்கள் நிறைய தரப்பட்டுள்ளன.

Fonts: உங்களுடைய பிளாக்குகளின் தலைப்பை அமைக்க ஒரு நல்ல பாண்ட் வேண்டுமா? அதுவும் ஷார்ப்பாக சிறப்பாக இருக்க வேண்டுமா? அப்படியானால் இந்த பிரிவில் நிச்சயம் நுழைய வேண்டும். இங்கு இலவசமாகக் கிடைக்கக் கூடிய தளங்கள் குறித்தும் எழுத்து வகைகள் குறித்தும் தகவல் கள் தரப்படுகின்றன. உங்கள் வலைமனை களை எந்த எழுத்துக்களைக் கொண்டு கவர்ச் சியாக அமைத்திடலாம் என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது.

Graphics: இங்கு உங்கள் வலைமனைகளுக்கான கிராபிக்ஸ் எங்கு கிடைக்கும் என்ற தகவல் தரப்படுகிறது. அத்துடன் மிகச் சிறப்பாக வெப் சைட்டுகளையும் பிளாக்குகளையும் அமைத்தவர்களுடன் பேட்டியும் தரப்படுகிறது. கிராபிக்ஸை எப்படி சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்ற அறிவுரையும் தரப்படுகிறது. குறிப்பாக பிளாக்குகளுக்கான டிசைன்களை வடிமைக்கையில் எப்படி கிராபிக்ஸ் உதவுகிறது என்றும் அறிவுரை தரப்படுகிறது.

Inspiration: இங்கு மற்ற பிளாக்குகளை எடுத்துக் காட்டி எப்படி உங்கள் வலைமனைகளை இன்னும் சிறப்பாக அமைக்கலாம் என்று எடுத்துச் சொல்லப்படுகிறது. இந்த தளத்திலேயே எனக்குப் பிடித்த பிரிவு இதுதான்.

Search Engines: பெரும்பாலான இணைய தளங்கள் அந்த தளங்களில் தங்களுடைய அல்லது பிற நிறுவனங்களின் சர்ச் இஞ்சின் எனப்படும் தேடுதல் தளங்களை அமைக்கின்றனர். தளம் அமைத்தவர்களுடையதோ அல்லது கூகுள் நிறுவனத்தினுடையதோ, இன்டர்நெட்டில் உள்ள எத்தகைய தளத்திலும் ஒரு சர்ச் இஞ்சின் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. இந்த பிரிவில் அப்படிப்பட்ட ஒரு சர்ச் இஞ்சினை உங்கள் பிளாக்கில் எப்படி அமைப்பது என்ற விபரங்கள் தரப்படுகின்றன.

Updates: கடைசியாகத் தரப்பட்டுள்ள பிரிவானாலும் முக்கியமான பிரிவாகும். இதில் அண்மைக் காலத்தில் வந்த சைட் அப்டேட் பைல்கள் பட்டியல் தரப்படுகிறது. அன்றைய செய்தியும் கிடைக்கிறது. பிளாக்குகள் வைத்துள்ள அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இணைய தளம் இது.

நன்றி: கம்ப்யூட்டர்மலர்

Sunday, July 26, 2009

மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைப்பின்னல்


கூகிளின் மிகவும் பிரபலமான Orkut ஒரு சமூக வலைப்பின்னல் தளம் இதில் உங்கள் நண்பர்களுடன் துனுக்குகள் (Scraps), ஒளிபடங்கள் மற்றும் YoTube நிகழ்படங்களை பகிர்ந்து கொள்ளலாம்.அதே போல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய சமூக வலைப்பின்னல் (Social Network) தளத்தை தொடங்கியிருக்கிறது இதன் பெயர் “Windows Live Planet“.இந்த புதிய சமூக வலைப்பின்னலில் உங்கள் Hotmail அல்லது Live பயனர் கணக்கின் மூலமாக உள்ளே நுழைந்து புதிய நண்பர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்ளலாம், அரட்டை, துனுக்குள் என சகல வசதிகளுடன் வந்திருக்கிறது.

Saturday, July 25, 2009

இலவச அலுவலக செயலி


அலுவலக செயலிகளை குதிரை விலை கொடுத்த வாங்கிய காலம் எல்லாம் மலையேறி போய்விட்டது. தற்போது அநேக நிறுவனங்கள் இணையத்தளத்தில் இலவச அலுவலக செயலி பாவனைக்கு விட்டுள்ளன.

அடோபி (ADOBE) நிறுவனமும் இவ்வாறான ஒரு சேவை ஆரம்பித்துள்ளது. இந்த web சேவையில் ஆவணங்களை உருவாக்குவதோடு அவற்றை PDF கோப்புக்களாகவும் உருவாக்கலாம். மாதத்திற்க்கு குறைந்தது 5 PDF கோப்புக்களை இலவசமாக உருவாக்கலாம்.
மேலும் இவைகளும் அடங்கும்.
Texteditor
Spreadsheet – சிட்டை presentation
எதிர்காலத்தில் உங்கள்I phone, Blackberry Nokia மேலும் Windows Samrtphoen போன்றவற்றிலிருந்து இவற்றை பயண்படுத்துவதற்க்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இணையச்சுட்டி http://www.adobe.com/

Wednesday, July 22, 2009

வெப்சைட்டுக்கு shortcut key


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 இப்போது பழக்கத்திற்கு வந்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. இதில் உள்ள பேவரிட்ஸ் பட்டியல் வழக்கம்போல் நமக்குப் பிடித்த வெப்சைட்டுகளை எளிதான கிளிக்கில் பெற்றுத் தருகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் திறக்கப்படாமல் இருக்கும்போதும் இந்த பேவரிட்ஸ் பட்டியலில் உள்ள தளங்களைத் திறக்கலாம். இதனை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் கமாண்ட் பாரில் பேவரிட்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும்.
2. இதில் உள்ள பேவரிட் தளங்களில் எதற்கு ஷார்ட் கட் கீ அமைக்க விரும்புகிறீர்களோ அதனை ரைட் கிளிக் செய்திடவும். மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இப்போது அந்த பேவரிட் தளத்திற்கான ப்ராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் "Web Document"என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Shortcut Key என்று இருப்பதற்கு அடுத்தபடியாக ஒரு ஷார்ட் கட் கீ தொகுப்பினை டைப் செய்திடவும். இந்த ஷார்ட் கட் கீ வேறு அப்ளிகேஷன் புரோகிராம் அல்லது விண்டோஸ் ஆப்பரெட்டிங் சிஸ்டம் பயன்படுத்தாததாய் இருக்க வேண்டும். இதற்கு Alt, Ctrl, மற்றும் Shift போன்றவற்றைப் பயன்படுத்தவும்.
எடுத்துக் காட்டாக தினமலர் இணைய தளத்திற்கு நீங்கள் Ctrl + Shift + Alt + D என்பதை உருவாக்கலாம். இதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.இனி இந்த ஷார்ட் கட் கீயினை அழுத்தினால் உங்களுக்குப் பிடித்தமான தளம் நீங்கள் டிபால்ட்டாக அமைத்திருக்கும் தளத்தில் திறக்கப்படும். அது இன்டர்நெட் எக்ஸ்புளோரராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பயர்பாக்ஸ், குரோம், சபாரி என எதுவாக வேண்டு மானாலும் இருக்கலாம்.

Undelete program


விண்டோஸ் சிஸ்டத்தில் பயன்படுத்தும் வகையில் நமக்குக் கிடைத்திருப்பது ரோட்கில் தரும் அன்டெலீட் (Roadkil’s Undelete) புரோகிராம். இது ஒரு இலவசமாய் டவுண்லோட் செய்யப்படக் கூடிய புரோகிராம். ஒரு ஸிப் பைல் உள்ளாக எக்ஸிகியூடபிள் பைலாக இது கிடைக்கிறது. இதனை ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவிலும் வைத்துப் பயன்படுத்தலாம். இதனால் ஹார்ட் டிரைவில் அழித்த பைலை எளிதாகத் திரும்பப் பெறலாம்.
இந்த புரோகிராம் பயன்படுத்த மிக மிக எளிதானது. இதனை இயக்கியவுடன் Recover from Drive’ என்பதிலிருந்து எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்கேன் முடிந்தவுடன் அந்த டிரைவில் அழிக்கப்பட்ட பைல்களில் எந்த எந்த பைல்களை மீண்டும் பெறலாம் என்று ஒரு பட்டியல் நமக்குக் காட்டப்படும். ஒவ்வொரு பைலுக்கும் அது இருந்த இடம், அளவு, நாள், அதன் தன்மை வகைகள், பைலின் தற்போதைய நிலை காட்டப்படும். எந்த பைலை மீண்டும் பெற வேண்டும் என விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுக் கவும். பின் "Browse"பட்டனை அழுத்தி எந்த இடத்தில் மீண்டும் பெறப்படும் பைலை வைக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் "Recover" என்பதனை அழுத்தவும். இந்த புரோகிராமினைப் பயன்படுத்திப் பார்த்த பிறகு வெவ்வேறான வகை பைல்களை நீக்கிப் பின் மீண்டும் பெற முடிந்தது. ஆனால் ஒரு பெரிய எக்ஸிகியூடபிள் பைலைப் பெற முடியவில்லை. இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடலாம்.

USB பாதுகாப்பாக அகற்றல்(USB safely Remove)
விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. சில வாரங்களுக்கு முன் இது போன்ற புரோகிராம் ஒன்று குறித்து எழுதி இருந்தோம். USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.1 தற்போது வெளியாகியுள்ளது. இதனை http://safelyremove.com/usbsafelyremovesetup.exe?v4newsen என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா!
1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல் மேனேஜரை இயக்கி என்ன என்ன பைல்கள் இருக்கின்றன எனப்பார்க்கலாம்.
2. யு.எஸ்.பி.யில் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தை நீக்கும் முன் அதில் உள்ள பைல்களை ஆட்டோ பேக் அப் எடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.
3. எக்ஸ்டெர்னல் டிரைவ் என்றால் அதனை இணைக்கும்போதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை செய்திடும் படி அமைக்கலாம். இதே போல பல செயல்பாடுகளை செட் செய்திடலாம்.
யு.எஸ்.பி.யில் இணைத்த சாதனம் எந்நிலையில் உள்ளது என்று அறிய பல்வேறு ஐகான்கள் காட்டப்படுகின்றன. இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் இயக்கத்தில் உள்ளனவா என்று காட்டப்படும். போர்ட்டில் சாதனங்களே இல்லை என்றாலும் ஐகான் மூலம் தெரிந்து கொள்ளலாம். இணைக்கப்பட்ட ஒரு சாதனத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் அது நீக்கப்படவில்லை என்றால் காட்டப்படும். இதன் பயன்பாடுகள் குறித்து மேலும் அறிய மேலே தரப்பட்டுள்ள இணைய தளத்தினையே காணவும்.
பி.டி.எப். ஸில்லா
பி.டி.எப். பைல்களை டெக்ஸ்ட் பைல்களாக மாற்றுவதற்கென பல புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின் றன. சில புரோகிராம்கள் குறித்து இந்த பகுதியில் ஏற்கனவே எழுதி உள்ளோம். அண்மையில் சிறப்பு அம்சம் ஒன்றுடன் கூடிய புரோகிராம் ஒன்றினைக் காண நேர்ந்தது. அதன் பெயர் பி.டி.எப். ஸில்லா (pdfzilla). இதனை http://www.pdfzilla.com/zilla_pdf_to_txt_converter.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இயக்கலாம். இதுவும் இலவசமே. எந்த ஒரு பிடிஎப் பைலையும் டெக்ஸ்ட்டாக இது மாற்றி தருகிறது. இதன் சிறப்பம்சம் என்னவெனில் மொத்தமாகவும் இது பிடிஎப் பைல்களைக் கையாள்கிறது. இந்த கன்வெர்டரில் பிடிஎப் பைல்களை இழுத்துக் கொண்டுவந்து விட்டுவிட்டால் பேட்ச் ப்ராசசிங் முறையில் டெக்ஸ்ட் பைல்களாக மாற்றுகிறது. அல்லது ஏதேனும் ஒரு டைரக்டரியில் மாற்ற வேண்டிய பிடிஎப் பைல்கள் அனைத்தையும் போட்டுவிட்டு அந்த டைரக்டரியினைச் சுட்டிக் காட்டி விட்டுவிடலாம். டெக்ஸ்ட் கன்வெர்ஷன் வேகமாக நடத்தப்பட்டு அவுட்புட் டைரக்டரிக்கு அனைத்து பைல்களும் டெக்ஸ்ட் பைல்களாகக் கிடைக்கின்றன.

Monday, July 20, 2009

சிஸ்டம் பாஸ்வேர்ட்(System password) மறப்பவர்களுக்கு.


போன் மூலமாகவும் கடிதம் மூலமாகவும் பல வாசகர்கள் என் சிஸ்டம் பாஸ்வேர்டை மாற்றினேன்; அல்லது பல நாட்களாக கம்ப்யூட்டரைத் தொடவில்லை. அதனால் பாஸ்வேர்ட் மறந்து போச்சு. என்ன செய்யலாம்? என்றெல்லாம் கேட்கின்றனர். இவர்களுக்கு ஒரு அருமருந்து ஒன்று தரப்போகிறேன்.பாஸ்வேர்ட் டைப் செய்கிறோம். சில வேளைகளில் தவறாக டைப் செய்கிறோம். சில வேளைகளில் மறந்து போய் பழைய பாஸ்வேர்ட் அல்லது வேறு ஒரு பாஸ்வேர்ட் கொடுக்கிறோம். இதற்குப் பதிலாக ஒரு பிளாப்பி அல்லது யு.எஸ்.பி. டிரைவில் பாஸ்வேர்டைப் போட்டு வைத்து அதனைச் செருகி கம்ப்யூட்டரை ஆன் செய்தால் அதுவே பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவிலிருந்து பாஸ்வேர்டை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? ஆஹா! என்கிறீர்களா! கீழே படியுங்கள். ஆஹா அஹஹா!! என்பீர்கள்.இந்த டிஸ்க்கிற்குப் பெயர் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் (Password Reset Disk) ஆகும். இந்த டிஸ்க் நீங்கள் பிளாப்பி டிஸ்க் அல்லது யு.எஸ்.பி. டிரைவ் வைத்துப் பயன் படுத்தினால் தான் சரியாக இருக்கும்.
1.முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும்.
2. அதன்பின் யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. இதில் உங்கள் அக்கவுண்ட்டில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரினைப் பார்க்கவும். இதில் Prevent a Forgotten Password என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
5. இனி Forgotten Password விஸார்ட் கிடைக்கும்.
6. இனி உங்கள் பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவினைச் செருகவும்.
7. தற்போதைய விண்டோஸ் எக்ஸ்பி யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்டினை டைப் செய்திடவும். பின் Nஞுதுt அழுத்தவும். சில நொடிகளில் உங்கள் Password டிஸ்க் ரெடியாகிவிடும்.
8. இனி விஸார்டில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

9. இதில் Password Reset Disk என எழுதி வைக்க மறக்க வேண்டாம். இதனை எப்படி பயன்படுத்துவது? எப்போதாவது உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போய்விட்டதா?
1.வெல்கம் ஸ்கிரீன் வந்தவுடன் உங்கள் யூசர் நேம் கிளிக் செய்து என்டர் அழுத்தவும்.
2. அடுத்து ஒரு மெசேஜ் கிடைக்கும். அதில் உங்கள் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்கினை செருகவும் என்று இருக்கும்.
3. அடுத்து "Use your password reset disk" என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும்.
4. மீண்டும் Password Reset Wizard என்ற விஸார்ட் திறக்கப்படும். தொடர்ந்து புதிய பாஸ்வேர்ட் அமைப்பதற்கான வழி முறை கிடைக்கும். அதனைப் பின்பற்றவும். புதிய பாஸ்வேர்ட் ஒன்றி னை அமைத்து இயக்கலாம்.
5. இனி மீண்டும் ஒரு Password Reset Disk தயாரிக்க வேண்டியதில்லை. இதனையே எப்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போகிறதோ அப்போதெல்லாம் இதனைப் பயன்படுத்தலாம். விஸ்டாவிலும் இதே போல நடைமுறையே கடைப்பிடிக்கப்படுகிறது.
நன்றி:தினமலர் கம்ப்யூட்டர்மலர்.

Monday, July 13, 2009

Registry என்றால் என்ன?







விண்டோஸ் இயங்கு தளத்தில் ரெஜிஸ்ட்ரி (பதிவகம்) என்பது ஒரு தரவுத் தளம். புதிதாக ஒரு வன்பொருளை அல்லது மென்பொருளை கணினியில் நிறுவும்போது அல்லது நீக்கும்போது அவை பற்றிய விவரங்களை தொடர்ச்சியாகப் பதியப்படும் ஒரு தரவுத் தளமே இந்த ரெஜிஸ்ட்ரி. கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய விவரங்கள் ரெஜிஸ்ட்ரியிலேயே பதியப்படுகின்றன.விண்டோஸில் என்னென்ன செட்டிங்ஸ் செய்யப்பட்டுள்ளன, கணினியை இயக்கியதும் எந்த எப்லிகேசன்களை ஆரம்பிக்க வேண்டும், ஒவ்வொரு பயனரும் என்ன செட்டிங்ஸ் வைத்திருக்கிறார், பல்வேறு எப்லிகேசன்களாலும் உருவாக்கப்படும் பைல் வகைகள் என்ன போன்ற் பல்வேறு தகவல்களை ரெஜிஸ்ட்ரி பதிந்து கொள்கிறது.டெஸ்க்டொப்பில் நீங்கள் காண்பவற்றையும், ஸ்டார் மெனு மற்றும் டாஸ்க் பார் என்பன எவ்வாறு இயங்குகின்றன, இயங்கு தளம் எவ்வாறு ஆரம்பிக்கின்றது என்பதனையும் ரெஜிஸ்ட்ரியே தீர்மாணிக்கின்ற்து.விண்டோஸ் 95 ற்கு முந்திய பதிப்புகளில் .ini (initialization) எனும் பைல் இந்த செயற்பாடுகளைத் தீர்மாணித்தன. இதற்கு மாற்றீடாகவே இந்த ரெஜிஸ்ட்ரி உருவாக்கப்பட்டுள்ளது.விண்டோஸ் கண்ட்ரோல் பேனலில் ஒருவர் மாற்றங்கள் செய்யும்போது தன்னையறியாமலேயே ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்கிறார். ரெஜிஸ்ட்ரியில் நாமாகவும் மாற்றங்கள் செய்யலாம்.ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்கள் செய்வதில் மிகுந்த அவதானம் தேவை. சராசரி கணினிப் பயனர்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்கள் செய்யாமலிருப்பதே நல்லது. ஏனெனில் நீங்கள் விடும் ஒரு சிறிய தவறும் கணினியில் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்வதற்கு முன்னர் ஒரு முன்னேற்பாடாக அதனை பேக்கப் (Backup) செய்து கொள்ள வேண்டும் அல்லது ஒரு ரீஸ்டோர் பொயிண்டை (Restore Point) உருவாக்கிக் கொள்ள வேண்டும். (பேக்கப், ரீஸ்டோர் பற்றி ஏற்கனவே இந்தப் பகுதியில் சொல்லியிருக்கிறேன்)எப்லிககேசன்களை முறையாக நீக்கப்படாதபோது ரெஜிஸ்ட்ரியில் அது பற்றிய தகவல்கள் சிதறலாக தேங்கியிருக்கும். இதனால் கணினியின் இயக்கத்தில் மந்த நிலை தோன்றும். அல்லது அடிக்கடி பிழைச் செய்திகளைக் (Error Messages) காண்பித்து எரிச்சலூட்டும். சில வேளை கனினி இயக்கமற்று முடங்கிப் போகவும் கூடும்.ரெஜிஸ்ட்ரியில் ஏற்படும் வழுக்களை நாமாக சரி செய்யவும் முடியும். அவற்றைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வென (Registry Cleaners) ரெஜிஸ்ட்ட்ரி க்ளீனர்ஸ் எனும் ஏராளமான மென்பொருள் கருவிகளும் பாவனையில் உள்ளன.மாதத்தில் ஒரு முறையேனும் இந்த ரெஜிஸ்ட்ரி க்ளீனரை இயக்கி ரெஜிஸ்ட்ரியில் ஏற்படும் பிழைகளை நீக்கிக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அடிக்கடி மென்பொருள்களை நிறுவுதல், நீக்குதல், பிழைச் செய்திகள் அடிக்கடி தோன்றுதல், கணினியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படல் போன்ற சந்தர்ப்பங்களில் ரெஜிஸ்ட்ரி க்ளீனரை அடிக்கடி இய்க்கிக் கொள்ளுதல் நல்லது. சில ரெஜிஸ்ட்ரி க்ளீனர்களில் உரிய கால இடைவெளிகளில் தானாகவே இயங்கும் வசதியும் இணைக்கபட்டிருக்கும். இந்த வசதி இல்லையாயின் விண்டோஸிலுள்ள ஸ்கெடியூல்ட் டாஸ்க் (Scheduled task) எனும் வசதியைப் பயன் படுத்தலாம்.ரெஜிஸ்ட்ரி கட்டமைப்புரெஜிஸ்ட்ரியானது ஐந்து தனியான கட்டமைப்புகளைக் கொண்டது. இவை ரெஜிஸ்ட்ரி தரவுத் தளத்தை முழுமையாகாப் பிரதி நிதித்துவப் படுத்துகின்றன. இந்த ஐந்து பிரிவுகளும் கீஸ் (Keys) எனப்படுகின்றன. ஒவ்வொரு கீயும் பல உப பிரிவுகளையும், உப பிரிவிகள மேலும் பல உட் பிரிவுகளையும் உள்ளடக்கியிருக்கும். அத்தோடு ஒவ்வொரு கீயும் பல்வேறு பெறுமானங்களையும் கொண்டிருக்கும்.. இங்கு HKEY என்பது Handle to a Key என்பதைக் குறிக்கிறது.



1) HKEY_CURRENT_USER இந்த ரெஜிஸ்ட்ரி கீயானது தற்போது கணினியில் லொக்-இன் செய்துள்ள பயனருக்குரிய தகவல்களைக் கொண்டுள்ளது.



2) HKEY_USERS இந்த கீயானது விண்டோஸில் பயனர் கணக்கு உருவாக்கியிருக்கும் அனைத்து பயனர் பற்றிய விவரங்களைக் கொண்டிருக்கும்.



3) HKEY_LOCAL_MACHINE இது கணினி பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்டிருக்கும்



4) HKEY_CLASSES_ROOT இங்கு பதியப்படும் தகவல்கள், ஒரு பைலை திறக்கும்போது அதனை எந்த எப்லிகேசனுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களைக் கொண்டுள்ளது..



5) HKEY_CURRENT_CONFIGடீவைஸ் ட்ரைவர். டிஸ்ப்லே ரெஸ்லுயூசன் மற்றும் எப்லிகேசன்கள் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது.ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்ய ரெஜிஸ்ட்ரி எடிட்டரை அணுக வேண்டும். அதற்கு ஸ்டாட் மெனுவில் ரன் தெரிவு செய்து Regedit என டைப் செய்யுங்கள் அப்போது Registry Editor விண்டோ தோன்றக் காணலாம்..


Friday, July 10, 2009

எச்சரிக்கை : Michael jackson புதிய ஈ-மெயில் வைரஸ்


மைக்கேல் ஜாக்சனின் பெயரைப் பயன்படுத்தி இமெயில்கள் மூலம் வைரஸ் பரவி வருகிறது. எனவே ஜாக்சன் என்ற பெயரில் இமெயில் வந்தால் திறந்து பார்க்காமல் அழித்து விடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.ஜாக்சனின் நினைவாக என்ற பொருளில் அனுப்பப்படும் அந்த மெயிலில், ஜிப் பைல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் மைக்கேல் ஜாக்சனின் இசை வடிவங்கள், இதுவரை பார்த்திராத படங்கள் உள்ளிட்டவை உள்ளதாக அந்த மெயில் கூறுகிறு. அடடா, என்று ஆச்சரியப்பட்டு திறந்து பார்த்தால் அவ்வளவதுதான், கம்ப்யூட்டர் காலியாகி விடுகிறதாம்.sarah@michaeljackson.com என்ற முகவரியிலிருந்து அந்த மெயில் அனுப்பப்படுகிறது.இந்த மெயிலைத் திறந்து பார்த்தால் நமது கம்ப்யூட்டர் மட்டுமல்லாது, யுஎஸ்பி மெமரி ஸ்டிக்கையும் இது பாதிக்கிறதாம்.அதேபோல மைக்கேல் ஜாக்சனின் கடைசிப் படைப்பு வீடியோ என்ற பெயரில் இன்னொரு வைரஸும் பரவுகிறதாம்.ஜாக்சன் ரசிகர்களே, ஜாக்கிரதை...
நன்றி : Times of India

Wednesday, July 8, 2009

கணணியை சுத்தப்படுத்த 10 வழிமுறைகள்




கம்ப்யூட்டரைப் பராமரிப்பதற்கான செலவினைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றால் அதனை அவ்வப்போது சுத்தப் படுத்தி வைத்திருக்க வேண்டும்.பலர் கம்ப்யூட்டரின் சிபியு கேபினட்டை டேபிளின் அடியில் சிறு பெட்டி போன்ற அமைப்பில் வைத்து .அதற்குக் கதவும் வைத்து பூட்டி விடுவார்கள். பின்புறமாக கேபிள்கள் இணைக்கப் பட்டிருக்கும் டேபிளை சுவர் ஓரமாக வைத்துவிட்டால் சிபியு கேபினட்டை சுத்தம் செய்வதனையே மறந்து விடுவார்கள். விளைவு? ஒரு நாள் கம்ப்யூட்டர் பூட் ஆகாது. சுத்தம் செய்யாததால் தூசியும் ஈரமும் சேர்ந்து மதர்போர்டு அல்லது இணைக்கும் வயர்கள் கெட்டுப் போயிருக்கலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளைக் கடைப்பிடித்தால் கம்ப் யூட்டருக்குப் பாதிப்பு வருவதைத் தடுக்கலாம்.

1. உங்கள் கம்ப்யூட்டரை எப்போ தும் தரையில் வைத்து இயக்க வேண்டாம். கம்ப்யூட்டர் டேபிள் அல்லது ஷெல்ப் மீது வைத்து பயன்படுத்த வேண்டும்.

2. கம்ப்யூட்டரைச் சுத்தம் செய்திடும் முன் கம்ப்யூட்டருக்கு வரும் மின் சக்தியை நிறுத்தவும். சிபியூவிற்குச் செல்லும் அனைத்துக் கேபிள்களையும் எது எது எங்கு மாட்டப்பட்டுள்ளது என்பதைக் குறித்துக் கொண்டு கழற்ற வும்.

3. இப்போது வேக்குவம் கிளீனர் போன்ற சாதனம் அல்லது சைக்கிளுக்கு காற்றடிக்கும் பம்ப் போன்றவற்றை வைத்து காற்றை கேபினுக்குள் அடிக்கவும். காற்று தரும் முனை அரை அடியாவது விலகி இருக்க வேண்டும். நன்றாக அனைத்து தூசியும் வெளியே வரும் வகையில் இந்த ட்ரீட்மெண்ட் கொடுக்கவும்.

4. இறுதியில் கம்ப்யூட்டர் கேபினுக்கு வெளியே ஈரத் துணி கொண்டு அனைத்தையும் அழுத்தம் தராமல் துடைக்கவும். கிளினிங் ப்ளூயிட் இருந்தால் அதனை லைட்டாக ஸ்பிரே செய்து அது உலர்ந்தவுடன் பேப்பர் டவல் கொண்டு சுத்தம் செய்திடவும்.

5. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் கம்ப்யூட்டர் உள்பாகத் தினை அல்லது மதர் போர்டினை ஈரத் துணி கொண்டு துடைக்கக் கூடாது. உள்ளே ஸ்பிரே செய்யக் கூடாது.

6. கம்ப்யூட்டரில் செயலாற்றுகை யில் அதன் அருகே டீ, காபி கப் வைத்தல், குடித்தல் போன்றவை கூடாது. சிறிய பின், கேர் பின், ஜெம் கிளிப் போன்றவற்றை கீ போர்டு அல்லது சிபியூவின் மேல் வைத்தல் கூடாது.

7. கீ போர்டினைக் கிளீன் செய்கையில் அதிகக் கவனம் தேவை. கீ போர்டை அதன் இணைப்பை விலக்கி விட்டு தலைகீழாகத் திருப்பி மெதுவாகத் தட்டவும். உள்ளே நுழைந்து குடி இருக்கும் சிறிய துகள்கள் மற்றும் தூசி வெளியே வரும். பின் நெட்டு வாக்கில் இரு புறமும் நிறுத்தி தட்டலாம். இனி வேக்குவம் கிளீனர் அல்லது அது போன்ற சாதனத்தைக் கொண்டு காற்றை உள் செலுத்தி சுத்தம் செய்யலாம். கீ போர்டின் மேலாக கிளீனிங் ப்ளூயிட் நனைத்த துணியைக் கொண்டு சுத்தம் செய்திடலாம். பின் ஈரத் துணி கொண்டு சுத்தப்படுத்தலாம். மெம்ப் ரேன் கீ போர்டாக இல்லாமல் மெக்கானிக்கல் கீ போர்டாக இருந்தால் கீ போர்டின் பின்புறம் உள்ள ஸ்குரூக் களைக் கழற்றி உள்ளே இருக்கும் போர்டில் உள்ள தூசியினைத் துடைத்து எடுக்க லாம். மெம்ப்ரேன் எனில் அதனைச் சரியாக மீண்டும் பொருத்துவது கடினம். எனவே கழட்டாமல் இருப்பது நல்லது. தூசி நிறைந்த சூழ்நிலையில் நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குபவராக இருந்தால் கீ போர்டுக்கென விற்பனை செய்யப் படும் பிளாஸ்டிக் கவரினைக் கொண்டு கீ போர்டை மூடி இயக்குவது நல்லது. எப்படி இருந்தாலும் மாலையில் அல்லது இரவில் பணி முடித்துச் செல்கையில் கீ போர்டுக்கான கவர் போட்டு மூடவும். பெரும்பாலும் ஐவரி வண்ணத்தில் கீ போர்டுகள் உள்ளன. கறுப்பு வண்ணத்திலும் கிடைக்கின்றன. ஐவரி வண்ணத்தில் இருந்தால் அடிக்கடி துடைத்தால் தான் அழுக்கு படிவது தெரியாது. வெகுநாட் களாகத் துடைக்காமல் இருந்து அது மஞ்சள் அல்லது கருப்பாகிப் போனால் பின் என்ன அழுத்தி துடைத்தாலும் பழைய வண்ணம் கிடைக்காது.

8. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன் பாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் உண்டென்றால் அது மவுஸ்தான். எனவே தான் அதனைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் தேவை. மவுஸ் பல திசைகளில் நகர்வதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால் அதனை அவசியம் சுத்தம் செய்திட வேண்டும். முதலில் மவுஸைக் கழட்ட வேண்டும். ட்ராக் பால் மவுஸாக இருந்தால் அதன் மேலாக உள்ள சிறிய வீல் போன்ற பாகத்தினை ஆண்டி கிளாக் வைஸ் திசையில் திருகினால் தனியே வந்துவிடும். ட்ராக் பாலும் வெளியே வரும். நிச்சயம் அந்த சிறிய பந்தில் நிறைய அழுக்கு சேர்ந்து கருப்பாகி இருக்கும். இதனைத் தண்ணீர் அல்லது கிளீனிங் லிக்விட் போட்டு துடைக்க வேண்டும். அது இருந்த இடத்தில் சிறிய கம்பிகள் இரண்டு தெரியும். இதில் சிறிய முடி அல்லது அழுக்குகள் சேர்ந்திருக்கும். இதனையும் முழுமை யாகச் சுத்தப்படுத்த வேண்டும். இனி ட்ராக் பாலினை அதன் இடத்தில் வைத்து மேலாக வீல் போன்ற பிளாஸ்டிக் வளையத்தை வைத்து கிளாக் வைஸ் திசையில் சிறிது சுழட்டினால் அது கெட்டியாக அமர்ந்து கொள்ளும். இனி மவுஸைப் பயன்படுத்துவது இலகுவாக இருக் கும். பிற வகை மவுஸ்களைச் சாதாரணமாக அதன் வெளிப்புறத்தில் துடைத்தால் போதும்.

9. மானிட்டரையும் தரையில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. மானிட்டரின் பின்புறம் உள்ள கவரை எப்போதும் கழட்டக் கூடாது. அழுத்தமான காற்றை பின்புறம் இருந்து முன் புறமாகச் செலுத்தினால் தூசு தானாக வெளியேறும். இதைப் பலமுறைச் செயல் படுத்தி தூசியை வெளியேற்ற வும். பின் ஈரத்துணி அல்லது கிளீனிங் லிக்விட் பயன் படுத்தி மானிட்டரின் வெளிப் பாகம் மற்றும் திரையைச் சுத்தம் செய்யலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிய துளைகளின் வழியாக எதுவும் ஸ்பிரே செய்யக் கூடாது.

10. ஆர்வக் கோளாறினால் எந்த துணை சாதனத்தையும் கழற்றிப் பார்க்கக் கூடாது. பின் மீண்டும் அதனை மாட்டுவது கடினமாகிவிடும்.

Tuesday, July 7, 2009

அழிக்க முடியாமல் இருக்கும் File களை அழிப்பதற்கு ஒரு மென்பொருள்(softare)-Unlocker

பலமுறை நாம் ஏதேனும் பைல்களை(Files) அழிக்க முற்படுகையில் சில எரிச்சலூட்டும் செய்திகள் காட்டப்பட்டு நம் முயற்சியில் குறுக்கே நிற்கும். அந்த செய்திகள் பின்வருமாறு இருக்கலாம்:–
இன்னொரு புரோகிராம் இந்த பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளது.
பைலைப்(File) பகிர்ந்து கொள்வதில் வரையறை மீறப்பட்டுள்ளது. இன்னொரு புரோகிராம்(Program) அல்லது இன்னொரு User இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். டிஸ்க்(Disk) முழுமையாக இல்லை அல்லது எழுதப்படவிடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. பைல் இப்போது பயன்பாட்டில் இல்லை.
Source அல்லது Destination File ஒருவேளை பயன்பாட்டில் இல்லை.
இதில் என்ன சோகம் என்றால் இன்னொரு புரோகிராம் பயன்படுத்துவதாக செய்தி வருகையில் நாம் கம்ப்யூட்டரில் வேறு எந்த புரோகிராமினையும் பயன்படுத்தாமல் இருப்போம். என்ன புதிராக உள்ளதே என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்போம். இன்னொரு யூசர் எங்கே இருக்கிறார்? இது யாரைக் குறிக்கிறது என்று வியப்பில் இருப்போம். இதெல்லாம் கம்ப்யூட்டரில் சில செட் அப் அமைப்பின் காரணமாக நமக்கு வரும் செய்திகள். பொதுவாக இது போன் ற செய்திகள் வருகையில் பைலை அழிக்கும் வேலையையே விட்டுவிடுவோம்; அல்லது ரீஸ்டார்ட் செய்து பைலை அழிப்போம்.
இந்த வேலை இல்லாமல், கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடாமல் பைலை அழிக்க இலவசமாக ஒரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் (Unlocker)அன்லாக்கர். இதனை http://ccollomb.free.fr/unlocker/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இதனை எளிதாக டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்திடலாம்.
இன்ஸ்டால் செய்த பின் நீங்கள் அழிக்க விரும்பும் பைல் அல்லது போல்டரில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.
கிடைக்கும் மெனுவில் Unlocker என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடுங்கள். நீங்கள் இலக்கு வைக்கும் பைல் மேலே சொல்லப்பட்ட காரணங்களால் லாக் செய்யப்பட்டிருந்தால் ஒரு சிறிய விண்டோ ஒன்று திறக்கப்படும்.
அதில் எந்த புரோகிராமினால் அல்லது யூசரால் எதற்காக லாக் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைக்கும்.
உடனே மிக எளிதாக “ Unlock All ” என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். பைல் இப்போது விடுவிக்கப்பட்டு டெலீட் செய்திட ஏதுவாக இருக்கும். நீங்கள் அதனை அழித்துவிடலாம்.

Sunday, July 5, 2009

கணினி -சில ஆலோசனைகள்

கணினி -சில ஆலோசனைகள்

பலமுறை நாம் கையாளும் இமெயில் அக்கவுண்ட்களில் நாமே செய்திடும் தவறுகள் குறித்து எழுதி வந்திருக்கிறோம். அவ்வப் போது ஒன்றிரண்டு தவறுகளைச் சுட்டிக் காட்டி அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளையும் குறிப்பிட்டுள்ளோம். இவை அனைத்தையும் ஒரு சேரக் கொடுத்தால் என்ன என்ற எண்ணத்தில் இந்த கட்டுரை தரப்படுகிறது.
1. ஒரே இமெயில் அக்கவுண்ட்: நமக்கென்று ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட் வைத்து அதனை மட்டும் பயன்படுத்தக் கூடாது. நம்முடைய மூதாதையர் வீட்டு முகவரியினை நிரந்தர முகவரியாகக் கொள்வது போல இமெயில் முகவரியினையும் எண்ணக் கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்களை நீங்கள் வைத்துக் கொள்ள வேண் டும். குறைந்த பட்சம் மூன்று இமெயில் அக்கவுண்ட்களையாவது ஒருவர் கொண் டிருக்க வேண்டும். இவற்றில் ஒன்றை வீட்டு பணிகளுக்கும் உறவினர்களுக் கும் வைத்துக் கொள்ளலாம். இன் னொன்றை உங்கள் அலுவலகப் பணிகளுக்கும் மற்றொன்றை உங்களின் இன்டர்நெட் சார்ந்த செயல்பாடுகளுக்குமாக வைத்துக் கொள்ளலாம். இமெயில் அக்கவுண்ட்கள் இலவசமாகக் கிடைத் தாலும் ஒரு இமெயில் அக்கவுண்ட்டை கட்டணம் செலுத்திப் பெறும் வகையில் வைத்துக் கொள்ளலாம்.
2. அக்கவுண்ட்டை மூடலாம்: ஏதேனும் ஒரு இமெயில் அக்கவுண்ட்டை வெகு நாட் களாக வைத்திருப்பீர்கள். அதன் மூலம் பல வழிகளில் தொடர்பினை ஏற்படுத் திக் கொண்டு இருந்தால் உங்களுடைய இமெயில் பல ஸ்பாம் மெயில் அனுப்புபவர்களிடம் சென்றிருக்கும். அதனால் தொடர்ந்து அந்த அக்கவுண்ட்டிற்கு மிக அதிகமான எண்ணிக்கையில் ஸ்பேம் மெயில்கள் என்னும் குப்பை மெயில்களும் உங்களை கண்ணி வைத்துப் பிடிக் கும் மெயில்களும் வந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த அக்கவுண்ட்டையே மூடிவிட்டு வேறு பெயரில் புதிய அக்கவுண்ட்டை ஏற்படுத்துங்கள். உங்களிடம் உள்ள மற்ற இமெயில் அக்கவுண்ட் மூலம் உற்ற நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு மட் டும் இந்த மாற்றத்தை தெரிவியுங்கள்.
3. பிரவுசரை மூட மறப்பது: உங்களுடைய இமெயில் அக்கவுண்ட்டை எப்போதாவது மற்ற இடங்களில் பிற கம்ப்யூட்டர்களில் இருந்து செக் செய்தது உண்டா? நூலகங்கள், சைபர் கபே என் னும் இன்டர்நெட் மையங்கள் ஆகிய வற்றில் அவசரத்தில் இமெயில்களைப் படித்திருப்பீர்கள். அப்போது அந்த பிரவுசர் அல்லது இமெயில் அக்கவுண்ட்டை மூட மறக்க வேண்டாம். லாக் அவுட் செய்து பிரவுசரை மூடவில்லை என்றால் உங்களுடைய யூசர் நேம் மற்றும் அக்கவுண்ட்டைப் பிறர் பயன்படுத்த முயற்சிக்கலாம்.
4. கேஷ் மெமரி காலி செய்யுங்கள்: அடுத்தவரின் கம்ப்யூட்டரில் இமெயில் அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி முடித்தவுடன் அதில் உள்ள கேஷ் மெமரியைக் காலி செய்திடுங்கள். அப்போதுதான் இன்டர் நெட் ஹிஸ்டரி, யூசர்நேம் மற்றும் பாஸ் வேர்ட் ஆகியவை அடுத்தவரின் கம்ப்யூட்டரில் தங்காமல் இருக்கும். உங்களை அடுத்து அந்த கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரிடம் இவை போய்ச் சேராது. இன் டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools மற்றும் Internet Options செல்லவும். கிடைக்கும் விண்டோவில் “Clear History”, “Delete Cokkies” மற்றும் “Delete Files” ஆகிய மூன்று பட்டன்களிலும் கிளிக் செய்திடவும். பயர்பாக்ஸ் பிரவுசர் என்றால் Ctrl + Shft+Del பட்டன்களை அழுத்தினால் இவை அனைத்தும் காலியாகிவிடும்.
5. மகளிர் கவனம் : பெண்கள் தங்கள் பெயரில் யூசர் நேம் கொண்டு இமெயில் அக்கவுண்ட்டை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அக்கவுண்ட்டைத் தெரிந்து கொண்ட வக்கிரபுத்தி கொண்ட பலர் வேண்டுமென்றே அநாமதேயப் பெயர்களில் உள்ள இமெயில் அக்கவுண்ட்டில் இருந்து மோசமான இமெயில் கடிதங்களை அனுப்புவார்கள். நான் அறிந்த வகையில் இது போன்ற ஒரு குடும்பப் பெண்ணிற்கு இமெயில் கடிதங்கள் வந்து அவருடைய கணவர் சந்தேகக் கண்ணோடு இதனை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொண்டார். பின் மற்றவர்களின் துணையோடு பிரச்சினை தீர்த்து வைக்கப் பட்டது. எனவே பெண்கள் தங்கள் பெயர்களில் யூசர் நேம் கொண்டு இமெயில் அக்கவுண்ட்களைத் திறப்பதனைத் தவிர்க்கலாம்.
6. பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துதல்: பலர் தங்களின் பெர்சனல் இமெயில் அக் கவுண்ட்களை தாங்கள் பணி புரியும் அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்துவார்கள். இதன் மூலம் அலுவலகக் கடிதங்கள் சில வேளைகளில் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் தங்கிவிடும். இதனால் அலுவலகத்தின் ரகசிய தகவல்களை அடுத்தவர்கள் பெறும் வாய்ப்பு அதிகமாகிவிடும். இதே போல உங்கள் பெர்சனல் கடிதங்களை அலுவலக நண்பர்கள் அறிந்து கொள்ளும் வேளைகளும் ஏற்படும்.
7. தொலைபேசி பயன்பாடு: மிக மிக முக்கியமான ரகசியத் தகவல்களை இமெயில் மூலம் அனுப்புவதைக் காட்டிலும் தொலை பேசி வழியாக தெரியப்படுத்துவதே நல்லது.
8. BCC (Blind Carbon Copy) பயன்படுத்தவும்: பெரும்பாலானவர்கள் இமெயில் சாதனத்தில் உள்ள BCC வசதியைப் பயன்படுத்துவதே இல்லை. பலருக்கு ஒரே இமெயிலை அனுப்புகையில் இதனை நாம் அவசியம் பயன்படுத்தலாம். யாருக்கெல்லாம் அனுப்புவது மற்றவர்களுக்குத் தெரியக் கூடாதோ அவர்களின் இமெயில் முகவரிகளை இந்த பகுதியில் அமைத்து அனுப்ப வேண்டும்.
9. ரிப்ளை ஆல்: இமெயில் கடிதம் ஒன்றுக்குப் பதில் அனுப்ப முயற்சிக்கையில் பலருக்கும் ரிப்ளை மட்டும் கிளிக் செய்திட வேண்டுமா அல்லது ரிப்ளை ஆல் (Reply or Reply All) கிளிக் செய்திட வேண்டுமா என்பது தெரிவதில்லை. Reply All அழுத்தினால் நீங்கள் யாருக்கு பதில் அனுப்ப வேண்டுமோ அவர் உட்பட அக்கடிதம் சார்ந்த அனைவருக்கும் உங்கள் பதில் சென்றுவிடும். இதனால் நீங்கள் அடுத்தவர் அறியாமல் அனுப்ப எண்ணும் பதில் மற்றவரையும் சேர்ந்துவிடும். எனவே எப்போதும் Reply மட்டும் அழுத்தி குறிப்பிட்டவரின் இமெயிலுக்கு மட்டும் அனுப்பவும். பின் மற்றவருக்கு அனுப்ப வேண்டும் என எண்ணினால் அதனையே தனித்தனியே அனுப்பிக் கொள்ளலாம். உங்கள் பதில் கடிதத்தில் மற்றவர்கள் அறிய வேண்டாத தகவல்களை அழித்து அனுப்பலாம்.
10. பார்வேர்டிங் இமெயில்: இமெயில் மெசேஜ் ஒன்று உங்களுக்கு பார்வேர்ட் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் உங்களுக்கு அதனை பார்வேர்ட் செய்தவருக்கு பதில் அனுப்ப எண்ணினால் அப்படியே பார்வேர்ட் செய்தால் அந்த மெயிலில் உள்ள அனைத்து முகவரிகளும் அவருக்கும் சென்றுவிடும். இதனால் இதற்கு முன் இந்த மெயிலைப் பெற்றவர்களின் முகவரிகள் தெரிந்துவிடும். மொத்தமாக ஸ்பேம் இமெயில் அனுப்புபவர்களுக்கு இது நல்ல வாய்ப் பாகப் போய்விடும். எனவே எந்த மெயிலை பார்வேர்ட் செய்வதாக இருந்தாலும் அதில் குறிப்பிட்டவரின் இமெயில் முகவரி மட்டும் டைப் செய்து அனுப்பவும்.
11.பேக் அப் மறப்பது: கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்களில் 90% பேர் பேக் அப் எடுப்பதில்லை என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பலமுறை அறிவுறுத்தப்பட்டாலும் இந்த தவற்றைப் பலர் செய்து வருகின்றனர். பேக் அப் எடுத்தலில் இமெயில் தகவல்களும் மிக முக்கியம். கம்ப்யூட்டரிலேயே இருக்கட்டும் என சில முக்கியமான பொருள் குறித்த தகவல்கள் அடங் கிய இமெயில்களை வைத்திருப்போம். இவற்றையும் நாம் பேக் அப் எடுத்தாக வேண்டும். இந்த வகை இமெயில்களில் பல சட்ட ரீதியான ஒப்பந்தங்கள் இருக்கலாம். வர்த்தக ரீதியான நிதி சார்ந்த தகவல்கள் இருக்கலாம். பெர்சனல் தகவல்கள், புக் செய்த டிக்கட்களின் படிவங்கள் என எத்தனையோ முக்கிய ஆவணங்கள் இருக்கலாம். இவற்றை பேக் அப் எடுத்து வைத்தால் தான் நாம் அதன் இழப்பிலிருந்து தப்பிக்கலாம்.
12.மொபைல் வழி இமெயில்: நீங்கள் உங் கள் மொபைல் போன் வழியாக இமெயில் அக்கவுண்ட்டை இயக்குபவரா? பிளாக் பெரி போன்ற போன்களை இதற்குப் பயன் படுத்துபவரா? இமெயில் பார்க்க இது நல்லதா? பாதுகாப்பானதா? பாதுகாப் பானதுதான். ஆனால் ஓரிரு விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது நல் லது. உங்கள் மொபைல் போனில் இமெயில் களைக் கொண்டு வரும் சாப்ட்வேர் தொகுப்பின் தன்மையினையும் அது எப்படி செட் செய்யப்பட்டிருக்கிறது என்பதனையும் புரிந்து கொள்ளுங்கள். சில மொபைல் பிரவுசர்கள் வழியே இமெயில் பார்த்தவுடன் சர்வரில் இருந்து அந்த இமெயில்கள் நீக்கப்பட்டுவிடும். அவை உங்களுக்குப் பின் நாட்களில் கிடைக் காது. எனவே எப்படி உங்கள் மொபைல் சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது என்று முதலில் செக் செய்து கொள்ளுங்கள்.
13. நல்லவேளை அழிச்சுட்டேன்!: சில வேளைகளில் நண்பர்களுக்கு அவர்கள் மனம் புண்படும் வகையில் மெயில்களை எழுதி அனுப்பி விடுவோம். அல்லது நம் நண் பர்களிடமிருந்து அத்தகைய மெயில்கள் வரலாம். இவற்றை அழித்துவிடுவோம். ஒருவழியா அழிச்சுட்டேன் என நீங்கள் நினைக்கலாம். அவை உங்கள் கம்ப் யூட்டரிலிருந்து அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அழிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி வந்தபின்னும் உங்கள் சர்வரில் அவை எங்காவது இருக்கலாம். இத்தகைய மெயில்கள் ஸ்பாம் அனுப்புபவர் கள் கைகளில் சிக்கினால் என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள். எனவே ஒருவருக்கு இமெயிலில் கடிதங்கள் அனுப் பும் முன், குறிப்பாக கோபத்தில் எழுதி அனுப்புமுன், ஒருமுறைக்கு பல முறை யோசித்து நிதானமாக சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் கழித்தே அனுப்பவும்.
14.ஸ்பாம் மெயிலை நம்புவது: அதிகப் பணத் திற்கு ஆசைப்படாத மனிதன் இல்லை. ஆனால் அந்தப் பணம் நம் உழைப்பிற்கு பரிசாக வர வேண்டும். பல ஸ்பேம் மெயில்கள் நமக்கு லாட்டரி பரிசு விழுந்திருக்கிறது என்றும், லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று பரிசாகத் தரப்படும் என் றும் அனுப்பப்படும். பின் பொருளை அனுப்பும் செலவிற்காகப் பணம் அனுப் பச் சொல்வார்கள். அல்லது பரிசு விழுந்த கோடிக்கணக்கான ரூபாயைக் கேட்டுப் பெற வங்கிச் செலவாக சில லட்சம் கேட்பார்கள். அல்லது வங்கியில் பணம் செலுத்த உங்கள் வங்கிக் கணக்கு, இன்டர் நெட் கணக்கின் யூசர்நேம் பாஸ்வேர்ட் கேட்பார்கள். தந்துவிட்டால் அவ்வளவுதான். நாம் உழைத்து சேர்த்த பணம் எல்லாம் நம்மை ஏமாற்றுபவன் கைகளுக்குச் சென்றுவிடும். எனவே இந்த மெயில்களைப் படிக்காமலேயே அழித்துவிட்டு ட்ரேஷ் பெட்டியிலிருந்தும் நீக்கிவிடுங்கள்.
15.பிஷ்ஷிங் மெயில்கள்: நம்மை சிக்க வைக்கும் மெயில்களே பிஷ்ஷிங் மெயில்கள். ஏதேனும் பிரபலமான பேங்க், இன்டர்நெட் வழி பேங்க் பே பால், மைக்ரோசாப்ட் போன்ற பிரபலமான நிறுவனப் பெயர்களில் இமெயில்கள் வரும். அதில் உள்ள லிங்க் கிளிக் செய்து தொடர்ந்தால் நம் கம்ப்யூட்டரில் அவர்களின் புரோகிராம்கள் அமர்ந்து கொண்டு நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும். எனவே இது போன்ற மெயில் கள் வந்தால் திறக்கவே கூடாது.
16.பெர்சனல் தகவல்கள்: இமெயில் மூலம் பெர்சனல் தகவல்களை அனுப்புவது எப்போதும் ஆபத்தான விஷயம். முகவரிகள், தொலைபேசி எண்கள், பேங்க் அக்கவுண்ட் எண்கள், யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை இமெயில் மூலம் அனுப்பவே கூடாது. இவற்றை போன் மூலம் தெரிவிக்கலாமே. ஏனென்றால் நீங்கள் அனுப்பும் இமெயில் இடையே மற்றொருவரால் குறுக்கிட்டுப் பெறக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதால் இமெயில்கள் மூலம் இந்த வகை தகவல்கள் செல்லவே கூடாது.
17. சப்ஸ்கிரைப் செய்யாத நியூஸ் லெட்டர்: நீங்கள் எந்த தளத்திலும் சென்று பதியாமல் ஒரு நியூஸ் லெட்டர் ஒன்று சரியான கால இடைவெளியில் வருகிறதா? அப்படியானல் நிச்சயம் அது ஸ்பேம் மெயில்தான். அதிலேயே உங்களுக்கு இந்த நியூஸ் லெட்டர் வேண்டாம் என்றால் இந்த லிங்க்கில் கிளிக் செய்து அன்சப்ஸ்கிரைப் செய்துவிடுங் கள் என்ற செய்தியும் ஒரு லிங்க்கும் தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரில் தகவல்களைத் திருடி அனுப்பும் புரோகிராம் வந்து அமர்ந்து கொள்ளும். எனவே அவற்றை அப்படியே அழித்துவிடுங்கள்.
18. நண்பர்களை மட்டும் நம்புங்கள்: சில வேளைகளில் நம் இனிய நண்பர்களிடமிருந்து மெயில்கள் வந்தவுடன் அதைத் திறந்து பார்த்து பின் பதில் மெயில் அனுப்புவோம். உங்கள் நண்பர்கள் நல்லவர்கள் தான், நம்பிக்கைக்குரியவர்கள்தான். ஆனால் அவர்களின் பெயரில் வந்த மெயில்கள் அவர்களிடமிருந்து வந்தவையாக இருக்காது. உங்கள் நண்பர் கம்ப் யூட்டரில் வந்தமர்ந்த ஸ்பேம் மெயில் அட்ரஸ் புக்கை திருடி அதில் இருந்த உங்கள் இமெயில் முகவரிக்கு அவர் பெயரில் மெயில்களை அனுப்பி இருக்கும். இந்த மாதிரி மெயில்களுக்கு அவசரத்தில் பதில் அனுப்புவதைத் தவிர்க்கவும்.
19. ஸ்பாம் மெயில் பிளாக்கிங்: உங்களுக்கு வந்த மெயில் ஸ்பாம் மெயில் தான் என்று தெரிந்தால் அந்த முகவரியினைத் தடுக்கப் பட வேண்டிய இமெயில் முகவரி லிஸ்ட் டில் சேர்த்து பிளாக் லிஸ்ட் செய்திட வேண்டும். அந்த முகவரியிலிருந்து மெயில் வந்தால் திருப்பி அனுப்பிவிடு என்று உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் செட் செய்திடுங்கள்.
20. அட்டாச்மெண்ட் ஸ்கேன்: உங்களுக்கு வரும் இமெயில்களுடன் அட்டாச் செய் யப்பட்டு பைல்கள் வருகின்றனவா? அப் படியானால் உங்கள் இமெயில் கிளையண்ட் அவற்றை ஸ்கேன் செய்த பிறகு டவுண்லோட் செய்திடும் வகையில் அதனை செட் செய்திட வேண்டும். அப்போதுதான் அட்டாச்டு பைல்கள் பாதுகாப்பானவையா என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
21. அடுத்தவர் மூலம் செக்கிங்: உங்களால் இமெயில் அக்கவுண்ட் பார்க்க முடியாத நிலையில் என்ன செய்கிறீர்கள். உங்கள் நண்பரை அழைத்து அவரிடம் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து இமெயில் செக் செய்யச் சொல்கிறீர்களா? அதைப் போன்ற தவறான செயல் எதுவுமில்லை. எந்த சூழ்நிலையிலும் அடுத்தவரிடம் உங்கள் பெர்சனல் தகவல்களைக் கொடுத்து இமெயில்களைச் செக் செய்திடச் சொல்ல வேண்டாம். கூடுமானவரை நீங்கள் மட்டுமே உங்கள் இமெயில் அக்கவுண்ட்டை செக் செய்திட வேண்டும்.
22.பாஸ்வேர்ட் அமைப்பு: உங்கள் பாஸ் வேர்ட் என்ன? ஒரு சிலர் தங்கள் பெயரையே வைத்துக் கொள்வார்கள். சிலரோ யூசர் நேம் எதுவோ அதனையே பாஸ் வேர்டாகவும் வைத்துக் கொள்வார்கள். ஒரு சிலர் தங்கள் குழந்தை, மனைவி பெயரை வைத்திருப்பார்கள். இவை எல்லாம் எளிதாகக் கண்டறியக் கூடிய பாஸ்வேர்டுகள். எனவே இது போல வைத்திருந்தால் உடனே மாற்றிவிடுங்கள். மாற்றுவதாக இருந்தால்(1) பாஸ்வேர்ட் குறைந்தது 8 கேரக்டருடன் இருக்க வேண்டும் (2) சிறிய பெரிய எழுத்துக்கள் அமைந்ததாக இருக்க வேண்டும். (3) ஸ்பெஷல் குறியீடுகளுடன் அமையப் பெற்றிருக்க வேண்டும். (4) இலக்கங்களையும் இணைத்து அமைக்க வேண்டும்.
23.என்கிரிப்ஷன்: உங்கள் இமெயில்களை என்கிரிப்ட் செய்வதில்லையா? அப்படியானல் செய்திடத் தொடங்குங்கள். என் கிரிப்ட் என்பது மெயிலை அடுத்தவர் யாரும் படித்திட முடியாதபடி சுருக்கி மாற்றி அமைப்பது. அதற்கான கீயைப் பெறுபவர் மட்டுமே அதனைப் படிக்க முடியும். இலவச என்கிரிப்ஷன் ப்ரோகிராம்கள் நிறைய கிடைக்கின்றன. PGP என்ற ஒரு புரோகிராம் நன்றாகச் செயல்படுகிறது. அதனைப் பயன்படுத்திப் பார்க்கவும்.
மேலே சொல்லப்பட்டவை எல்லாம் இமெயில் பாதுகாப்பிற்கான சில முக்கிய வழிகள். இவற்றை அவசியம் கடைப்பிடித்து வருவது உங்களுக்கும் உங்கள் இமெயில்களுக்கும் பலமான பாதுகாப்பினைத் தரும்.
பகுப்புகள்: கம்ப்யூட்டர் செய்தி